பெருவெளியின் பேரருவி
வெற்று மார்பில்
அறைந்து சிதறி வழிகையில்
இடைநழுவி நீங்கி
நதியில் கலந்து மறையும்
ஓர் ஒற்றை ஆடை நான்.
பெருவெளியின் பேரருவி
வெற்று மார்பில்
அறைந்து சிதறி வழிகையில்
இடைநழுவி நீங்கி
நதியில் கலந்து மறையும்
ஓர் ஒற்றை ஆடை நான்.
பௌர்ணமி இரவில்
கடல் அலைகளில் மினுங்கும்
நிலவொளியின் நடனத்தைப் பார்த்தபடி
நாம் பேசிக்கொண்டிருந்தோம்.
அதில்
இடைஇடையில் நிலவும்
அலைகளின் மௌன இடைவெளிகளில்
நாம் முத்தமிட்டோம்.
The Sun is fast drowning into the horizon.
Soon we will part with each other.
Our heart is brimming with
the myriad colours of the dusk.
Break this silence with
A touch
A kiss
Or
An everlasting embrace.
தொடுவானில்
விரைந்து மூழ்கிக் கொண்டிருக்கிறது
அந்திச் சூரியன்.
நாம் இன்னும் சற்று நேரத்தில்
பிரிந்து சென்று விடுவோம்.
அந்தியின்
எண்ணற்ற வண்ணங்கள் நிறைந்து
தளும்புகிறது நம் இதயம்.
இந்த மௌனத்தை உடைத்தெறி.
ஒரு தொடுகையில்
ஒரு முத்தத்தில்
ஒரு முடிவிலாத் தழுவலில்.
கொலை புரிந்தாயிற்றா?
சரி
உடனே உன் உடைவாளை
சுத்தமாக கழுவிவிடு.
நீரில் கரைந்து
நினைவுகள் யாவும் நீங்கி
அதன்கூர் முனை மின்னிட
மிகுந்த கவனத்துடன் கழுவிவிடு.
பின் அதை
இரகசியமாய் உறைக்குள் ஒளித்து வை
எக்கணமும் விழித்திருக்கும்படி.
உனக்கும் எனக்கும் இடையில்
திரைகள் விலகும்போது,
அங்கே ஊற்றெடுக்கிறது
ஓர் அருஞ்சுணை.
இரகசிய இருளெல்லாம் நீங்கி
ஒளிர்கிறது ஒரு சுடர்.
நித்ய மௌனத்தில்
சப்திக்கின்றன நம் இதயங்கள்.