செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

 நிலமெங்கும் நடந்து நடந்து

காதல் விதைத்தோம்.

கரம் மீது கரம் வைத்து

நிலம் நோக்கி நீரூற்றினோம்.

இப்போது

விண்மீன்கள் பூத்த வயலில்

மின்னுகின்றன வெண்மணிகள்.

குருவிகள் அடைகாக்கும் இரவெலாம்

கண்விழித்து காவல் காத்து

வெண்மணிகள் சேகரித்தோம்.


பின்

கதிரவன் உதித்த அவ்வேளை

விண்மீன்களோடு

நாம் காணாமல் போனோம்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு