ஞாயிறு, 14 டிசம்பர், 2025

 இந்த இரவில் ஏன் 

மண்மீது உதிர்கிறாய் மரமல்லியே?

உலராத கண்ணீர்துளிகளென 

உனைக்கண்டு திக்கென்கிறது என் மனம்.

உன்னைத் தொட்டெடுக்கையில் நடுங்குகின்றன என் விரல்கள்.

உன்னில் எஞ்சியிருக்கும் வாசம்

என்னிடம் சொல்வதுதான் என்ன?

மண்மீது வாழ்ந்து வீழ்ந்து 

மரித்துப் போதல் சுகந்தமென்றா?



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு