வெள்ளி, 12 செப்டம்பர், 2025

கொலை புரிந்தாயிற்றா?

சரி 

உடனே உன் உடைவாளை 

சுத்தமாக கழுவிவிடு.


நீரில் கரைந்து

நினைவுகள் யாவும் நீங்கி 

அதன்கூர் முனை மின்னிட

மிகுந்த கவனத்துடன் கழுவிவிடு.


பின் அதை

இரகசியமாய் உறைக்குள் ஒளித்து வை

எக்கணமும் விழித்திருக்கும்படி.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு