இரவினில்
முழுநிலவில்
உன் முலைநடுவே
வெள்ளி முல்லைகள்.
பகலில்
கதிரொளியில்
உன் மையொளிர் முலைநடுவே
பொன்கொன்றை இதழ்கள்.
இரவினில்
முழுநிலவில்
உன் முலைநடுவே
வெள்ளி முல்லைகள்.
பகலில்
கதிரொளியில்
உன் மையொளிர் முலைநடுவே
பொன்கொன்றை இதழ்கள்.
நீ என்
கிளைகளில் இலைகளில் இல்லை.
வேர்களில் இருக்கிறாய்.
மொட்டென மலரென
நினைவின் சிறுசிறு முடிச்சுக்களென.
நான் யாசிக்கிறேன்.