இந்த இருள் வானில்
இன்னொரு மின்மினியாய்
ஒளிர்ந்திரு.
பின்னொரு நாளில்
ஒரு எரிகல்லாய்
மறைந்து போ.
வேணு வேற்றாயன் ஆல் வெளியிடப்பட்டது இங்கு 7:49 AM | 0 கருத்துகள்
நினைவுகள்.
உதிர்ந்த
ஒற்றை இலையில்
எஞ்சி இருக்கும்
அதன்
மஞ்சள் நிறம்.
வேணு வேற்றாயன் ஆல் வெளியிடப்பட்டது இங்கு 6:16 AM | 0 கருத்துகள்
உயிர்களில் உன்னதம்
மலர் என்றேன்.
உனைநான்
உச்சியில் சூடினேன்.
சொல்லாமல் நீங்கினேன்.
வேணு வேற்றாயன் ஆல் வெளியிடப்பட்டது இங்கு 6:14 AM | 0 கருத்துகள்
என் வாழ்வு
இவ்வுலகின் நிகழ்வுகளுக்கு
நான் ஆற்றும் எதிர்வினை அல்ல.
சின்னஞ்சிறு மலர்களில்
நான் அருந்தும்
மீச்சிறு தேன்துளி.
வேணு வேற்றாயன் ஆல் வெளியிடப்பட்டது இங்கு 6:10 AM | 0 கருத்துகள்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
இதற்கு குழுசேருகஇடுகைகள் [Atom]