வியாழன், 23 ஜனவரி, 2025

இந்த இருள் வானில்

இன்னொரு மின்மினியாய்

ஒளிர்ந்திரு.


பின்னொரு நாளில்

ஒரு எரிகல்லாய்

மறைந்து போ.

செவ்வாய், 21 ஜனவரி, 2025

 நினைவுகள்.

உதிர்ந்த

ஒற்றை இலையில்

எஞ்சி இருக்கும்

அதன்

மஞ்சள் நிறம்.

 உயிர்களில் உன்னதம்

மலர் என்றேன்.

உனைநான் 

உச்சியில் சூடினேன்.


உயிர்களில் உன்னதம்

மலர் என்றேன்.

உனைநான் 

சொல்லாமல் நீங்கினேன்.

 என் வாழ்வு 

இவ்வுலகின் நிகழ்வுகளுக்கு

நான் ஆற்றும் எதிர்வினை அல்ல.


சின்னஞ்சிறு மலர்களில்

நான் அருந்தும்

மீச்சிறு தேன்துளி.