ஒரு மஞ்சரி உனைநான்
நாடி வருகிறேன்.
சிறியவன் எளியவன்
எனை உன் மடியேந்தி
சிறுதுளி தேனமுதினை ஊட்டுகிறாய்.
I come in search of You,
an inflorescence.
I'm tiny and light enough to-
Perch on You
And
You are kind enough to-
Bear me and spare Your nectar.
மேலே
மாடியில்
சிலர் கூடி
சிலவற்றைப் பற்றி
சற்றே தீவிரமாகப்
பேசிக்கொண்டிருந்தார்கள்.
அதே பொழுதில்
கீழே
ஒரு மந்தாரை மரத்தில்
ஒரு கிளையில்
ஒரு மலர்
மார்கழி மாலைக் காற்றில்
அதன் போக்கில்
ஆகாயத்தில் ஆடிக் கொண்டிருந்தது.