திங்கள், 10 பிப்ரவரி, 2025

 ஒரு குழந்தையை

கையளித்துச் செல்வது போல

அவள்

உன்னை என்னிடம் விட்டுச்செல்கிறாள்.


இக்கணத்தில்

நீ எனக்கு தேவதை.

அவள் என் தெய்வம்.

நானோ ஓர் எளிய மானுடன்.


உன்னைக் கையில் ஏந்தி நிற்கையில்

என் கண்களில் பூத்து

உன் தாள்மீது உதிர்கின்றன

தூய கண்ணீர்த்துளிகள்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு