உடல் முழுக்க காய்த்திருக்கிறது
ஒரு இலவம் பஞ்சு மரம்.
இலவு காத்து
இக்கோடை வரை விழித்து
காத்திருந்த என் கண்களில்
இன்றெல்லாம்
வெடித்த வெண்ணிறத்தின்
மிருதுவான ருசி.
வேணு வேற்றாயன் ஆல் வெளியிடப்பட்டது இங்கு 9:48 PM | 0 கருத்துகள்
சிறு மலர்.
அதில் சிறு சிறு வெண்ணிற இதழ்கள்
பூத்து மணக்கிறது
இந்த பௌர்ணமி இரவு.
இரவில் பூத்து
விடியலில் உதிரும்
எத்தனை சிறிய
பூர்ண வாழ்வு இது !
வேணு வேற்றாயன் ஆல் வெளியிடப்பட்டது இங்கு 1:16 AM | 0 கருத்துகள்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
இதற்கு குழுசேருகஇடுகைகள் [Atom]